

Inactive· since Apr 7, 2026
- 113
- days it ran
- 0
- relaunches
Ad copy
“நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? குழந்தை சீரியஸா இருக்கு, இப்போவும் பணம் இல்லாம எதுக்கு வந்த” என ஹாஸ்பிட்டல் என்று கூட பார்க்காமல் கோபமாக கத்தினாள் சுமித்ரா. “நான் பணத்துக்கு முயற்சி பண்ணேன், ஆனா கிடைக்கல, நீ கவலைபடாத, ஹாஸ்பிட்டல்ல நான் பேசி பார்க்கறேன் “ என தலைகுனிந்தபடி கூறினான் ராம். ராம் சுமித்ராவோடு சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் மளிகை கடை நஷ்டமானதில் இருந்து பிரச்சனை ஆரம்பமானது, அவன் குழந்தை காயத்திரியின் உடல்நல குறைவில் அவன் சேமிப்பு எல்லாம் கரைந்து இந்த நிலைக்கு வந்து விட்டான். “உன்ன நம்பினது என் தப்பு தான், ஒழுங்கா என் அப்பாகிட்ட போய் பணம் வாங்கிட்டு வா, இப்போவும் உன் கௌரவத்த பார்த்து என் பொண்ணு உயிரை எடுத்துடாத” என கண்களில் கண்ணீரோடு பேசினாள் சுமித்ரா. ராம் அமைதியாக நிற்க சுமித்ரா குழந்தையை பார்க்க சென்று விட்டாள். “சார், நீங்க இன்னைக்குள்ள பணம் கட்டியே ஆகணும், இல்லைனா குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கறத நிறுத்திடுவோம்” என நர்ஸ் கூற ராமிற்கு அதிர்ச்சியாக இருந்தது. “அப்படிலாம் பண்ணிடாதிங்க, கண்டிப்பா நான் பணத்தை கட்டிடுவேன், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” “உங்கள எப்படி சார் நம்ப முடியும், உங்கள பத்தி தான் இங்க இருக்கவங்க எல்லாம் பேசறாங்களே, நீங்களே பொண்டாட்டி காசுல தான் உட்கார்ந்து சாப்ட்டுட்டு இருக்கீங்கன்னு, அப்படி இருக்கும் போது இவ்ளோ பணத்தை எப்படி உங்களால கட்ட முடியும்” என அவமானபடுத்தினாள் நர்ஸ். பதில் சொல்ல முடியாமல் ராம் நிற்க “பேசாம உங்க பொண்டாட்டி சொன்ன மாதிரி உங்க மாமனார் கால்ல விழுந்து பணத்தை வாங்கிட்டு வாங்க, பணம் இல்லாம வந்தீங்கன்னா எங்களால ஒன்னும் பண்ண முடியாது” என எச்சரித்து விட்டு சென்றாள் நர்ஸ். “இவங்க நினைக்கற மாதிரி நான் போனதும் என் மாமனார் பணம் கொடுக்க போறது இல்ல, பணம் கேட்டு போனா சுமித்ராவை விட்டு பிரிய சொல்வாரு, இது ஏன் யாருக்கும் புரிய மாட்டேங்குது” என வேதனைபட்டவன் தன் நண்பனை பார்க்க சென்றான். “என் குழந்தை ஹாஸ்பிட்டல்ல சீரியஸ் கண்டிஷன்ல இருக்கா, பணம் இல்லாம அவளை காப்பாத்த முடியாது, நீ தான் எனக்கு உதவி பண்ணனும்” என கோபாலிடம் தன் கஷ்டத்தை கூறி கொண்டிருந்தான் ராம். அறைக்குள் சென்ற கோபால் திரும்ப பணக்கட்டோடு வந்தான். “இதுல அறுபதாயிரம் இருக்கு, முதல்ல ஹாஸ்பிட்டல்ல போய் கட்டு” என கோபால் பணத்தை நீட்ட ராமிற்கு கண் கலங்கி விட்டது. “ரொம்ப நன்றிடா, இது ரொம்ப பெரிய உதவி” என ராம் பணத்தை வாங்க போன சமயத்தில் வேறொரு கை பணக்கட்டை பிடுங்கி கொண்டது. “ராதா, எதுக்காக இப்படி பண்ற” என கோபால் கத்தினான். “நீங்க சும்மா இருங்க, நான் ராம்கிட்ட பேசணும்” என்றவள் “ராம் எப்போ தான் எங்கக்கிட்ட பிச்சை எடுக்கறத நிறுத்துவிங்க, இது எங்க கல்யாணத்துக்காக வச்சிருக்க பணம், இது கூட உங்களுக்கு கொடுக்கணுமா?” என கோபமாக கேட்டாள். கோபால் ராமிற்கு உதவி செய்வானா? ராம் பணத்திற்காக மாமனார் கண்டிஷனுக்கு சம்மதித்து மனைவியை பிரிவானா? பணமில்லாமல் ராம் ஹாஸ்பிட்டல் சென்றால் குழந்தையின் நிலை என்னவாகும்? இதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
வாரிசு
மயக்கமடைந்த தன்னுடைய காயத்ரியை கைகளில் தாங்கி, ராம் மருத்துவமனையை நோக்கி விரைந்தான். அவனது குரலில் ஆழ்ந்த கவல....
LEARN MORELike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







