

Inactive· since Jan 11, 2026
- 40
- days it ran
- 1
- relaunches
Ad copy
"உன்னை எப்போவும் மனைவியா ஏத்துக்க முடியாது ரோஜா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால நல்லா வாழ்ந்திடலாம்னு கனவு காணாத” என முதலிரவு அறையில் வைத்து சித்தார்த் கோபமாக ரோஜாவிடம் கூறினான். "ஏன் சித்தார்த் உனக்கு என் மேல இவ்ளோ கோபம், என்ன ஏத்துக்க மாட்டியா?” என பாவமாக கேட்டாள் ரோஜா. ரோஜா சித்தார்த்தை ஏழு ஆண்டுகளாக நேசித்திருந்தாள். அவனை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே தனது மிகப்பெரிய கனவாகக் கொண்டிருந்தாள். ஆனால் அது நடந்தும் அவள் வாழ்க்கை சந்தோஷமாக மாறி இருக்கவில்லை. “ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காதடி, என் மனைவியா இருக்க தகுதி ஆர்த்திக்கு மட்டும்தான் இருக்கு, முதல்ல தள்ளி போ” என அவளை தள்ளி விட்டவன் கட்டிலில் போய் படுத்து கொண்டான். “பரவால்ல சித்தார்த், இப்போ நீங்க என் மேல கோபமா தான் இருப்பீங்க, ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, என்னோட காதல் கண்டிப்பா உங்கள மாத்தும்” என முணுமுணுத்து கொண்டாள் ரோஜா. ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் சித்தார்த் மாறி இருக்கவில்லை. ரோஜாவின் பிறந்த நாளை கூட பொருட்படுத்தாமல் போன சித்தார்த்திடம் "ஒரு நிமிஷம் நில்லுங்க சித்தார்த், நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது, உங்களுக்கு எப்போதான் என்னோட காதல் புரியும்" என ரோஜா ஆதங்கத்தோடு கேட்டாள். "காதலா, உன் குடும்பமே என் பணத்துக்காக தானே அலையறீங்க, என் தாத்தா உயிருக்கு போராடிட்டு இருந்த நேரத்தை யூஸ் பண்ணி அவர் மூலமா என்ன கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டீங்க.. பாவம் என் தாத்தாவும் உங்க சதி திட்டத்துல என்ன பலியாக்கிட்டாரு.. இத புனிதமான காதல்னு வேற பெருமைபடுத்தறயா?" என கோபத்தோடு கேட்டான் சித்தார்த். "சித்தார்த் பிளீஸ், திரும்ப திரும்ப அதையே சொல்லாதீங்க, நான் பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்கலன்னு உங்களுக்கு நிரூபிக்க நான் என்ன செய்யனும் " "நீ ஒன்னும் செய்ய வேண்டாம் என்னை விட்டுப் போனா போதும்" என்ற சித்தார்த் அங்கிருந்து சென்று விட்டான். அவன் வார்த்தைகளில் அழுது களைத்த ரோஜா ஒரு முடிவுக்கு வந்தாள். “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சித்தார்த்” என தூங்க போனவனை தடுத்து நிறுத்தினாள். “இன்னைக்கு என்ன டிராமா போட போற, சொல்லு” என எரிச்சலாக கேட்டான் சித்தார்த். “கவலைபடாதிங்க, இனி டிராமா போட நான் உங்ககூட இருக்க போறது இல்ல.. இது தான் நாம ஒன்னா இருக்க போற கடைசி ராத்திரி” என ரோஜா கூறவும் சித்தார்த்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. “நிஜமாவா, இல்ல இதுவும் உன்னோட விளையாட்டுல ஒன்னா” என நம்பாமல் கேட்டான். “நாளைக்கு விடியும் போது உங்களுக்கு உண்மை என்னனு புரியும், ஆனா நீங்க நான் சொல்றதுக்கு சம்மதிச்சா மட்டும் தான் இது நடக்கும்” என ரோஜா அவனை நெருங்கி வந்தாள். “எதுக்கு என்கிட்டே வர, என்ன பண்ண போற” என சித்தார்த் பதறினான். “இது தான் என்னோட கண்டிஷன்” என கூறி சித்தார்த்துக்கு முத்தம் கொடுக்க வந்தாள் ரோஜா. ரோஜாவின் கண்டிஷனுக்கு சித்தார்த் சம்மதிப்பானா? ரோஜா கூறியபடி சித்தார்த்தை விட்டு பிரிந்து செல்வாளா? சித்தார்த் ரோஜாவின் காதலை உணர்வானா? இதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ராட்சசனின் ரோஜா
### அத்தியாயம் 1: சித்தார்த் உடன் மூன்று ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவன் ஒரு முறை கூட ரோஜாவைத் த...
LEARN MORELike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







