

Inactive· since Apr 7, 2026
- 113
- days it ran
- 0
- relaunches
Ad copy
இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தான் கௌதம் வெங்கடேஷ். அவன் முகத்தில் இருந்த இறுக்கமும், கண்களில் தெரிந்த குளிரும் எதையோ உணர்த்தின. அவன் வருகைக்காகக் காத்திருந்த இஷா ராவின் முன்னால், ‘படார்!’ என்ற சத்தத்துடன் ஒரு காகிதக் கட்டை விட்டெறிந்தான். அது ஒரு விவாகரத்து ஒப்பந்தம். “இஷா இத்தனை நாள் நம்ம எதுக்காக ஒண்ணா இருந்தோமா அந்த காரணம் முடிஞ்சிடுச்சு.. லாவண்யா கண் முழிச்சிட்டா.. இனி இந்த வீட்டுல ஒரே திருமதி வெங்கடேஷ் அவ மட்டும்தான் இருப்பான்னு சத்தியம் பண்ணியிருக்கேன். இஷா, இதுல கையெழுத்துப் போடு. நாம டைவர்ஸ் பண்ணிக்கப்போறோம்.காதலே இல்லாம ஒரு உறவை கண்டினியூ பண்ண நான் விரும்பல..சோ இன்னைக்கே நம்ம எல்லாத்தையும் முடிச்சிக்கலாம் ,” என்றான் கௌதம். அந்தக் குரலில் இருந்த அதிகாரம் இஷாவின் இதயத்தைக் குத்தியது. இது நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவள் கண்கள் கலங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. தன்னைச் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். “மூணு வருஷத்துல ஒரு நாள் கூடவா உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரல..நான் நம்ம கல்யாண வாழ்க்கையில உங்களுக்கு உண்மையா இருந்தேன்.. உங்களுக்காக எவ்ளோ செஞ்சிருக்கேன்..ஆனா நீங்க ஏன் எனக்கு இப்படி ஒரு கஷ்டத்தை தர்ரிங்க ?” என்று கசப்புடன் கேட்டாள். கௌதம் ஏளனமாகச் சிரித்தான். “ என்ன இப்போ ரொம்ப நல்லவ மாதிரி நடிக்கிற.. எனக்கு உன்னை பத்தி எல்லாமே ஏற்கனவே தெரியும்.. நான் எதுக்காக உன்னை நம்பணும் ? நீ எப்போதுமே ஒரு பேராசை பிடிச்ச, திமிர் பிடிச்ச பொண்ணு. நான் எதுக்கு உன்னை நம்பணும்? திரும்பத் திரும்பப் பேச வைக்காத. இதுல கையெழுத்துப் போடு, இந்த ECR-ல் உள்ள பங்களா உனக்கு. நாம பிரியறதுக்கு நான் தர்ற பரிசு இதுதான்..என்னை கேட்டா உனக்கு அதுவே ரொம்ப ஜாஸ்தி..இன்னைக்கு அந்த பங்களா பல கோடி விலை போகும் அதை வச்சிட்டு வாழு !”. ‘கல்யாண வாழ்க்கை ஆரம்பிக்கும்போது எல்லாரும் தருவாங்க.. ஆனா என் புருஷன் கல்யாண வாழ்க்கையை முடிக்க பரிசு தர்றாரு!’ இஷாவின் உள்ளுக்குள் கேலிச் சிரிப்பு எழுந்தது. வெறுங்கையோடு அனுப்பாமல் கருணை காட்டுவதாக இவன் நினைக்கிறானா? அவள் அந்த ஒப்பந்தத்தைக் கையில் எடுத்தாள். அவன் பெயர் ஏற்கெனவே அதில் இருந்தது. “பாட்டி இதுக்கு சம்மதிச்சாங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். கௌதமின் முகம் கோபத்தில் இறுகியது. “பாட்டி உனக்கு எப்பவுமே துணை நிப்பாங்கன்னு நினைக்கிற அளவுக்கு உனக்கு என்ன தைரியம்?இத்தனை நாள் பாட்டி கொடுத்த ஆதரவுலதான எல்லாம் பண்ண.. ஆனா இனி அது நடக்காது நாம எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு உனக்கு நல்லாத் தெரியும். பேராசைப்படாத, என் வெறுப்பை இன்னும் அதிகமா சம்பாதிச்சுக்காத,” என்று சீறினான். இஷா நக்கலாகச் சிரித்தாள். “வெறுப்பு, இன்னும் வெறுப்பு. இதுல என்ன பெரிய வித்தியாசம்.ஏற்கனவே என்னை உயிரோட கொன்னுட்டிங்க.. இனியுமா வெறுப்பு காட்டி என்னை கஷ்ட படுத்த முடியும்னு நினைக்கிறிங்க?”. அவள் ஒரு பேனாவை எடுத்தாள். அந்த பங்களா பற்றிய விசயங்களை மட்டும் பேனாவால் அடித்தாள். பிறகு, தன் பெயரைத் துளியும் தயக்கமின்றி எழுதி முடித்தாள். அவள் அவனை நேராகப் பார்த்து, “ இந்த பங்களா எனக்குத் தேவையில்லை,” என்றாள். “ஏன் உனக்கு இந்த பங்களா வேண்டாம் புது டிராமா ட்ரை பண்றியா..”,என்றான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவள் தொடர்ந்தாள், “நான் எந்த டிராமாவாவும் பண்ணல..நீங்க இதே பங்களாலதான் உங்க லவ்வரரோட வாழ்ந்தீங்க, அதனால... நான் இங்க இருக்க மாட்டேன் ”.என்றவள் வீட்டை விட்டு வெளியேறினாள் இஷா தன் கணவனை எளிதில் பிரிய காரணம் என்ன? கௌதம் இஷாவின் மீது வெறுப்புக்கொள்ள அவசியம் என்ன ? வேறு பெண்ணை விரும்பிய கௌதம் இஷாவை ஏன் திருமணம் செய்தான்? தெரிந்துகொள்ள உடனே கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இணை சேருமோ நம் காதலே
டின்னர் ஆறிப்போய் வெகுநேரம் கழித்து கௌதம் வெங்கடேஷ் வீட்டிற்குள் நுழைந்தான். `படார்!` என்று ஒரு சத்தத்துடன், அவ....
LEARN MORELike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







